பாம்பு கடி மருந்து, பாம்பு கடி மூலிகை, பாம்பு கடி வைத்தியம் , பாம்பு கடித்தால் , பாம்பு விஷம்

பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்! பாம்புக்கடி வைத்திய முறைகள்!      
பாம்பு விஷம் எப்படி உடலை பாதிக்கும்?
கருநாகம் அல்லது இராஜ நாகம் (King Cobra) என்பது தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் வசிக்கும் ஒரு பாம்பு இனம் ஆகும். இதன் அறிவியற்பெயர் Ophiophagus hannah (ஓ'வியோ'வாகசு ஃஅன்னா) என்பதாகும். நச்சுப்பாம்புகளில் இதுவே உலகில் மிக நீளமானது. சுமார் 6.7 மீட்டர் (22 அடி) வரை வளரவல்லது). பொதுவாக அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வாழும் இந்த வகை பாம்புகள், மற்ற பாம்புகளையே பெரும்பாலும் உணவாகக் கொள்கின்றன. இதன் நஞ்சின் கடுமை ஒரே கடியிலேயே ஒரு மனிதனைக் கொல்லவல்லது. இதன் கடியால் இறப்பு நேரிடும் வீதம் 75% வரை இருக்கும் பாம்பு கடி மருந்து.

கருநாகத்தின் நஞ்சானது மிகவும் கொடியது. இது தனது ஒரே கடியில் மனிதனை கொல்ல வல்லது. இது கடித்த சில நிமிடங்களிலேயே மனிதன் கோமா நிலைக்கு சென்று மரணத்தை தழுவிவிடுவான். மேலும் ஆசிய யானைகளும் இது கடித்த 3 மணி நேரத்தில் இறந்து விடும்.இதன் நஞ்சானது ஆப்பிரிக்க கறுப்பு மாம்பா பாம்புகளை விட 5 மடங்கு அதிகமானது. பாம்பு கடி மருந்து.

உண்மையில் இதன் நஞ்சானது குறைந்த அளவு நச்சு தன்மையே கொண்டதுதான். ஆனால் இவ்வகை கருநாகங்கள் ஒரு முறை எதிரியைக் கடிக்கும் பொழுது, ஏறத்தாழ 6 முதல் 7 மில்லி அளவு நஞ்சை அதன் உடலில் செலுத்தவல்லது. இதன் காரணமாகவே இதன் எதிரிகள் உடனடியாக மரணத்தை தழுவுகின்றன. பாம்பு கடி மருந்து.

இதன் நஞ்சை முறிக்க இதுவரை இரண்டு மருந்துகளே கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. முதலாவது தாய்லாந்து நாட்டில் இயங்கும் செஞ்சிலுவை சங்கம் கண்டுபிடித்தது. மற்றது இந்திய மத்திய ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்தது. ஆனால் இவை இரண்டும் பரவலாக கிடைக்காத காரணத்தால், இதன் கடி பட்ட பலரும் இறந்து விடுகின்றனர். பாம்பு கடி மருந்து.

பொதுவாக எல்லா விஷப் பிராணி மற்றும் ஜந்துக்களுக்கும் விஷத்தை உற்பத்தி செய்யும் பிரத்யேகச் சுரப்பி அமைந்துள்ளதைப் போன்றே நல்லப் பாம்பிற்க்கும் அதன் தலைப்பகுதியில் விஷச்சுரப்பி அமைந்துள்ளது. இதன் வாயின் மேற்பரப்பில் இதன் விஷ-பை (venom sac) அமைந்துள்ளது. இந்த விஷ-பையுடன் இணைந்த குழாய்(venom duct) உட்புறம் முற்றிலும் துளையுடைய முன்புற பற்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த முன்புறப் பற்களின் முனை மிகக் கூர்மையாகவும் துளையுடையதாகவும் அமைந்துள்ளது. இவை தங்களின் எதிரிக்கு காயத்தை ஏற்படுத்துவதற்காகவே தீண்டுகிறது. அதன் பிறகு வாயின் உட்புறம் அமைந்த கடைவாய் பற்களைக் கொண்டு அதன் மேற்ப்புறத்தில் அமைந்த விஷ-பையை அழுத்துவதன் மூலம் வெளியேறும் விஷம் அதனுடன் இணைக்கப் பட்ட குழாய் மூலம் வெளியேறி துளையுடைய முன்பற்களை அடைகின்றது. அப்பொழுது தீண்டியதால் ஏற்ப்பட்ட காயத்தின் மூலம் விஷம் இரத்த ஓட்டத்தில் கலந்தவுடன் முதலில் மத்திய நரம்பு மண்டலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இதுக் தீண்டியவுடன் பொதுவாக மரண பயம் ஏற்பட்டு விடுவதனால் இதயம் மிக வேகமாக துடிக்க ஆரம்பிக்கின்றது. இதன் மூலமும் இரத்தம் விரைவுப் படுத்தப்பட்டு விரைவாக விஷம் உடல் முழுதும் பரவி ஆபத்தையும் விரைவுப் படுத்துகின்றது பாம்பு கடி மருந்து.

பாம்பின் விஷம் செரிந்த புரோட்டீன்களினால் (highly protin) ஆன பொருளாகும். இது நியூக்ரோ டாக்ஸிஸ் என்று அழைக்கப்படுகின்றது. புரதம் என்ற ஒரு சத்துப் பொருள் மனிதன் உயிர்வாழ மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். நாம் உண்ணக்கூடிய மாமிசம் மற்றும் தாவர எண்ணெய் போன்றவற்றில் புரதங்கள் அடங்கியுள்ளன. இருப்பினும் நம் உடல் அமைப்பை பொருத்தவரை புரதமோ, வைட்டமின்களோ, அல்லது தாதுப் பெருள்களோ நம் வாயின் மூலம் உட்கொள்ளப்பட்டு வயிற்றில் செரிமானம் செய்யப்பட்டு நம் உடலுக்குத் தேவையான மற்றொருப் பொருளாக மாற்றப்பட்டு (metabolism) தேவையற்றவை அகற்றப்பட்டு அதன் பிறகுதான் இரத்தில் கலக்க இயலும். ஆனால் பாம்பு கடிப்பதனால் விஷம் (highly protin) இரத்தத்தில் நேரடியாக கலப்பதனாலும் நம் உடலின் இயல்பிற்கு மாற்றமாக இருப்பதனாலும் நம் உடலின் திசுக்களும் கல்லீரலும் நரம்பு மண்டலங்களும் பாதிப்படைந்து மரணத்திற்கு வழி வகுக்கின்றது. பாம்பின் விஷம் பல விதமான மருத்துவத்திற்கு பயனாகின்றது. பாம்பு கடிக்கான மருந்து தயாரிப்பிலும் (anti venom) வலி நிவாரணம், மூட்டுதசை மற்றும் கேன்சர் நோய்க்கான மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு  கிராம் நல்ல பாம்புடைய விஷம் 50-க்கும் மேற்பட்ட மனிதர்களை கொல்ல போதுமானதாகும். ஒரு முறை இவை கொட்டுவதனால் பிரயோகம் செய்யப்படும் விஷம் (ஏழு டன் எடைக் கொண்ட ) மிகப்பெரிய யானையையே சில மணித்துளிகளில் மரணிக்க செய்ய போதுமானதாகும். மற்றுமொரு அம்சம் முட்டையிலிருந்து வெளிவந்த சிறிய பாம்புடைய விஷம் வீரியம் மிக்கப் பெரிய பாம்பின் விஷத்தை போன்றே எந்த விதத்திலும் குறையாத வீரியம் மிக்கதாகும். இதிலிருந்து முட்டையிலிருந்து வெளிவந்த குட்டிப் பாம்பு கூட மரணத்தை விளைவிக்கும் ஆற்றலுடன் தான் பிறக்கின்றது பாம்பு கடி மருந்து

பாம்பு கடித்தவுடன் உடலுக்குள் செலுத்தப்படும் விஷம் ரத்த ஓட்டத்தையும் நரம்பு மண்டலத்தையும் தாக்கி உயிரிழப்பு ஏற்படக் காரணமாகிறது பாம்பு கடி மருந்து.

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பேர் வரை பாம்புக் கடியால் உயிரிழக்கின்றனர் பாம்பு கடி மருந்து.

பாம்பின் நஞ்சு மிகவும் கடுமையானதாக இருக்கும் நிலையில், விஷமுறிவு மருந்துகளின் தயாரிப்பும் குறைந்துவருவதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

பாம்பு மனிதர்களை கடித்து விஷத்தைச் செலுத்தியவுடன் அது இரண்டு வகைகளில் மனிதர்களின் உடலைத் தாக்கும் பாம்பு கடி மருந்து.

பாம்புக்கடி மருந்து :
பாம்பு கடித்து விட்டால் உடன் வாழை மரம் ஒன்றை அடியிலும் நுனியிலும் வெட்டி ஆறு அடி நீளத் துண்டிட்டுக் கொண்டு வரவேண்டும். பாம்புக்கடி பட்டவன் பல் கட்டி வாய் திறக்க முடியாமலிருப்பான். அதனால் வாழைப்பட்டையை உரித்துப் பாயாகப் பரப்பிக் கடிபட்டவனை அதில் படுக்கவைக்க வேண்டும். பின் வாழைப்பட்டைச் சாறு 1 லிட்டர் பிழிய வேண்டும். சாறு பிழிவதற்குள் வாழைப்பட்டையில் படுக்கவைத்தவன் பல்கட்டு நீங்கி வாய் இயல்பாகத் திறக்கும். உடன் ஒரு லிட்டர் வாழைப்பட்டைச் சாறையும் பாம்புக் கடிபட்டவனைக் குடிக்கச் செய்ய வேண்டும். 15 நிமிடத்தில் பாம்புக் கடிபட்டவன் நஞ்சு நீங்கி எழுந்து நடப்பான்.

நல்லபாம்பு கடித்து விட்டால் மருந்து :
கடிவாய் எரியும்,வாந்தி வரும், நடை தளரும்,மயக்கம் வரும், மூக்கில் நுரை வரும்,உயிர்ப்பு தடை படும்,இறப்பு நேரிடும்,வேப்பிலை கசக்காது, மிளகு காரம் இருக்காது,ஆடு தீண்டாப்பாளை வேர் இனிக்கும்,  இரு  பற்கள் தடம் இருக்கும் குருதி பெரும்பாலும் வராது இதற்க்கு அரை மணி  நேரத்தில் மருந்து கொடுத்து விட வேண்டும் . வாழை மட்டையைப் பிழிந்து அதன் சாற்றை 200-மி.லி.கொடுக்க  வேண்டும்.அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்கலாம்.நினை வற்று இருந்தால் உடைகளைக் களைந்து வாழை மட்டையில் படுக்க  வைக்கவும் ,வாய் திறக்கும் ,வாழைப் பட்டை சாற்றை ஊற்றலாம்.  விஷம் முறிந்து பிழைத்துக் கொள்வார்கள் பாம்பு கடிக்கு மருந்து.

வீரியன் பாம்பு கடித்து விட்டால் மருந்து :

இது  கடித்து விட்டால் கடி வாய் தொடர்ந்து எரியும்,குருதி தொடர்ந்து வரும்,கடி வாய் சதை வீங்கி நீல நிறமாக மாறும்,வாயில்,மூக்கில் குருதி வரும்,சிறு நீரும் குருதியாகும்,ஆடு தீண்டாப் பாளை வேர் உப்புக்கரிக்கும் சிரியா நங்கை,வேம்பு கசக்காது.இது கடித்த அரை மணி நேரத்தில்   சிரியா நங்கையை அரைத்து நெல்லி அளவு கொடுத்தால் விஷம் இறங்கி  வரும் 10-நிமிடம் கழித்துக் சிறிது கொடுத்தால் கசக்காத மூலிகை சிறிது கசக்கும்,மீண்டும் பத்து நிமிடம் கழித்துக் கொடுத்தால் கசப்பு நன்றாகத் தெரியும் விஷம் படிப் படியாக இறங்குவது தெரியும் பாம்பு கடிக்கு மருந்து

பாம்பு கடித்துவிட்டால், பாம்புக்கடிக்கு உள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை "அட்மிட்" செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் பாம்பு கடிக்கு மருந்து.

பாம்புக்கடி பற்றிய சில முக்கிய தகவல்கள்:
கடித்த இடம், மனிதன் கடித்தது போல் அனைத்து பற்களும் வரிசையாக பதிந்து காணப்படுகிறதென்றால், இந்த அறிகுறி விஷப்பாம்பு கடி அல்ல.

கடித்த  இடம், இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதிந்த்து காணப்படுகிறதென்றால், கடித்த இடம் சற்று தடித்து (வீங்கி) கடுமையான வலி உண்டானால், இந்த அறிகுறி விஷப்பாம்பு கடியாகத்தான் இருக்கும்.

பாம்பு கடிக்கு முதலுதவி:

இறுக்கி கட்டுப் போடவேண்டாம். இறுக்கி கட்டுப் போடுவதன் மூலம், சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்தப்பகுதி அழுகிபோகும். லேசான இறுக்கத்துடன் கட்டுப்போடுவது நல்லது.

காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும்.

பாம்பு கடிபட்டவர் பதற்றமடையகூடாது. அவர் பதற்றமடையும்போதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் பாம்பு கடிக்கு மருந்து.

பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்க கூடாது. ஏனெனில் நாம் வேகமாக நடக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் நம் ரத்தத்தில் கலந்துள்ள விஷம் விரைவில் நம் உடல் முழுவதும் பரவி உயிரிழப்பை விரைவுபடுத்துகிறது பாம்பு கடிக்கு மருந்து

இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தைரியமூட்டி எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றோமோ அந்த அளவிற்கு அவரைக் காப்பாற்றும் வாய்ப்புள்ளது பாம்பு கடிக்கு மருந்து.

பாம்பு கொத்திய இடத்தை, இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.

பாம்பு கடித்து விட்டால், பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை "அட்மிட்" செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் பாம்பு கடிக்கு மருந்து.

இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க நேர்ந்தால், பாம்பின் தலையில் அடித்துக் கொல்ல வேண்டாம். ஏனென்றால் தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காணலாம். கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை பாம்பு கடிக்கு மருந்து.

பாம்பு கடித்து உடலில் விஷம் பரவிவிட்டால் கிட்னியையும், கண்களையும் உடன் பாதிக்ககூடும். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்.


பாம்பு கடி மூலிகை
பாம்பு கடி வைத்தியம்
பாம்பு கடித்தால்
பாம்பு விஷம்

நாட்டு வைத்திய முறை பாம்பு கடி மூலிகை
 நம்மிடையே பல காலங்களாக இருந்து வந்த நாட்டுப்புற வைத்தியர்கள் (சித்த வைத்தியர்கள்) இப்போது குறைந்து போனதால் நாட்டு மருந்துகளை பற்றிய விசயங்களும் மறைந்து வருகின்றன. முன்பெல்லாம் பாம்பு கடியை பற்றி அவ்வளவாக பயப்பட மாட்டார்கள். கடித்த பாம்பு எதுவென்று தெரிந்து கொண்டால் எளிதாக வைத்தியம் பார்த்து பிழைத்துக்கொள்ளலாம் என்பதை உறுதியாக நம்புவார்கள் பாம்பு கடி மூலிகை.

பொதுவாக கிராமங்களில் வயல்வரப்புகளில் எலிகளை தேடி வரும் பாம்புகள் அங்கு வேலை செய்யும் விவசாயிகளை கடித்து விடுவதண்டு. என்ன கடித்தது என்றே தெரியாமல் ஏதோ கடித்து விட்டது என்ற எண்ணிக் கொண்டு மந்திரித்தால் சரியாகி விடும் என்று விட்டு விடுபவர்கள் தான் பெரும்பாலும் இறந்து போகிறார்கள் பாம்பு கடி மருந்துகள் பாம்பு கடி மூலிகை

பாம்புகளில் ஏராளமான வகைகள் இருக்கின்றன. நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், ஊது சுருட்டை, வளனை, சாரை, தண்ணீர் பாம்பு( டிஸ்கவரி சேனலில் அவ்வப்போது பசிக்கு பியர் கிரில்ஸ் பிடித்து சாப்பிடுவது), கொம்பேறி மூக்கன், மலைப்பாம்பு, கருநாகம், சுண்டக்கருவினை, சாரை என்று பல வகை இருக்கின்றன.ஆனால் இவற்றில் மனிதனை கொல்லக்கூடிய அளவுக்கு விஷமுள்ளவை குறைவே. ஆனால் கடுமையான விஷமுள்ளவை என்று கருநாக வகை பாம்புகளின் கடி தான் ஆபத்தானவை. ஆனாலும் பாம்பு கடித்த அடுத்த நிமிடம் முதலுதவி கிடைத்து விட்டால் கடி பட்ட நபரை பிழைக்க வைத்து விடலாம் என்பது தான் உண்மை.

இது தவிர கடிபட்ட நபர்கள் தன்னை கடித்தது என்ன பாம்பு என்று அடையாளத்தை சரியாக சொல்ல தெரிந்தால் அந்த நபருக்கு நச்சு முறிவு மருந்தை உடனடியாக தேர்வு செய்ய முடியும். பொதுவாக இப்படி அடையாளம் காண தெரியாமல் விடும் போது தரப்படும் தடுப்பு மருந்துகள் ஒருவரின் உயிரை பிழைக்க வைத்து விட்டாலும், கடி பட்ட இடத்தில் இருக்கும் தசை அணுக்கள் செயலற்று போய்விடுகின்றன.

எனவே பாம்பு கடித்து விட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். நோயாளி சுயநினைவுடன் இருக்கும் போதே பாம்பின் அடையாளத்தை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் இருக்கும் சில பாம்பு பிடிக்கும் குழு மக்களுக்கு பாம்புகள் கடித்தால் விஷம் ஏறுவதில்லை என்று சமீபத்தில் டிஸ்கவரி சேனலில் சொல்வதை பார்க்க முடிந்தது. காரணம், காலம் காலமாக இந்த இனத்து மக்கள் பாம்பு பிடிப்பதும், அவர்கள் பாம்பு கடிபடும் போது அது அவர்கள் உடலில் நாளாவட்டத்தில் பாம்பு விஷத்தை முறித்துக்கொள்ளும் அளவு வலிமை பெற்றிருப்பதும் தெரியவந்தது. ஆனால் சாதாரண நபர்கள் பாம்புகளிடம் கடி பட்டால் பதறிவிடுகிறார்கள்.

பாம்பு கடித்ததும் ஐயோ....பாம்பு கடித்து விட்டதே என்று அதிர்ச்சியடைகிறார்கள். இப்படி ஏற்படும் அதிர்ச்சியும் பயமும் தான் அந்த நபரை மரணத்தின் விளிம்புக்கு அழைத்து சென்று விடுகிறது. பாம்பு கடித்து விட்டால் பதறக்கூடாது. இது தான் மிக முக்கியமானது. கடித்த பாம்பு தப்பித்து விட்டாலும் அதன் தோற்றத்தை நினைவில் கொள்ள வேண்டும். அப்போது தான் மருத்துவர்கள் சரியான விஷ முறிவு மருந்தை தேர்வு செய்ய முடியும்.

பொதுவாக கடிபட்ட இடத்தில் பாம்பின் ஒரு பல் பதிந்திருந்தால் அது தோலை மட்டும் தான் பாதித்திருக்கிறது என்றும், இரண்டு பல்லும் பதிந்திருந்தால் அது சதையை பாதிக்கும் என்றும், மூன்று பல் பட்டால் அது எலும்பை பாதிக்கும் என்றும், நான்கு பல் பட்டால் மூளையை பாதிக்கும் என்றும் சொல்வார்கள். பொதுவாக பற்குறி அழுத்தமாக தெரிந்தாலோ, கடிபட்ட இடம் கூர்மையான தீக்கனலில் காட்டிய ஊசியை இறக்கியது போல் எரிச்சலாக இருந்தாலே கடியின் வேகம் அதிகம் என்று தெரிந்து கொள்ளலாம்.

இப்படி இருக்கும் நிலையில் கிராமப்புறங்களில் விரலி மஞ்சளை நெருப்பில் காட்டி அது தணலாக இருக்கும் போது இந்த மஞ்சளின் எரிந்து கொண்டிருக்கும் பகுதியை வைத்து கடிவாயில் அழுத்துவார்கள். இதனால் பாம்பின் நஞ்சு முறிந்து விடும் என்கிறார்கள் அனுபவ வைத்தியர்கள்.

மருத்துவர்கள் இல்லாத பல கிராமங்களில் இன்றும் இது நடைமுறையில் இருக்கிறது. இது தவிர பாம்பு கடி பட்ட நபர்களுக்கு வாழை மட்டையை திருகினால் வரும் சாற்றை எடுத்து குடிக்க கொடுப்பதுண்டு. இந்த வாழைப்பட்டை சாறு பாம்பின் விஷத்தை முறிக்கிறது என்பது கைகண்ட வைத்திய முறை.

நாகப்பாம்பு அல்லது கருநாகம் கடித்திருந்தால் கடித்த இடத்தில் ஒரு பல்லுக்கும் இன்னொரு பல்லுக்கும் ஒரு அங்குல இடைவெளி தென்படும்.

விரியன் பாம்பு கடித்திருந்தால் இரண்டிற்கும் மேற்பட்ட பற்குறிகள் காணப்படும்.

நல்ல பாம்பு கடித்தால் ரத்தம் வேகமாக உறையும். மற்ற பாம்புகள் கடித்தால் ரத்தம் உறையாமல் கடி இடத்திலிருந்து ரத்த ஒழுக்கு இருக்கும்.

பாம்பு கடிபட்டவருக்கு ஆமணக்கு இலைகளுடன், ஏழு மிளகை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து உள்ளுக்குள் கொடுத்தால் பாம்பின் நஞ்சு ஏறாது. மணிக்கு ஒரு தடவை இந்த மருந்தை கொடுத்து வரவேண்டும். இந்த பச்சிலை மருந்து வாந்தியை ஏற்படுத்தி நஞ்சை நீங்க செய்யும்.

பாம்பு கடித்த நபரை எக்காரணம் கொண்டும் தூங்க விடக்கூடாது. உப்பு, புளி, காரம், எண்ணெய் நீக்கிய வெறும் பச்சரிசியும், பாசிப்பயறும் சேர்த்து பொங்கல் செய்து சாப்பிட தரவேண்டும். பாம்பு கடி பட்டவர் மூர்ச்சையாகி விட்டால் தும்பை செடியை கசக்கி பிழிந்து சாறு எடுத்து அவரது மூக்கினுள் சிறிது விட வேண்டும். இதனால் மூர்ச்சை தெளிந்து விடும். இது தவிர அருகம் புல்லை வெண்ணெய் போல் அரைத்து கடிபட்ட இடத்தில் வைத்து கட்டினால் பாம்பின் நஞ்சு இறங்கி விடும். அருகம்புல்லின் வாசனை மூர்ச்சையை தெளிய வைக்கும்.

நஞ்சு இறங்கி கடிபட்டவர் ஒரளவு தெளிவான நிலையில் இருந்தால் அவருக்கு வேப்பிலையை வாயில் போட்டு மெல்ல சொல்ல வேண்டும். அப்போது கசப்பு தெரிந்தால் நஞ்சு வெளியாகி விட்டது என்று தெரிந்து கொள்ளலாம். இந்த நிலையில் தும்பை இலை, தும்பை பூ ஆகிய இரண்டையும இடித்து சாற்றை குடிக்க தரவேண்டும். இப்படியான நாட்டு வைத்திய முறையில் பாம்பு கடிபட்டவரை முதலுதவி செய்து காப்பாற்றி விடலாம்.

பாம்புகள் கடித்தால் அறிகுறிகள். . .
நல்ல பாம்பு கடித்தால், கடிபட்ட இடத்தில் வலி இருக்கும். சிலருக்கு வலி தெரியாது. பார்வை மங்கும். கண் இமை சுருங்கும். நாக்கு தடிக்கும். பேச்சு குளறும். வாயில் எச்சில் வடியும். மூச்சு திணறும். நினைவு குறையும்.

கட்டு விரியன் கடித்தால் இந்த அறிகுறியுடன் வயிற்று வலியும் இருக்கும். கண்ணாடி விரியன் கடித்தால் கடிபட்ட இடத்தில் வலி கடுமையாக இருக்கும். கடிபட்ட இடத்தில் வீக்கம், மூச்சுதிணறல், வாந்தி, சோர்வு, சிறுநீர், மலம் ஆகியவற்றுடன் ரத்தம் வரும்.

1. கடித்த இடம், மனிதன் கடித்தது போல் அனைத்து பற்களும் வரிசையாக பதிந்து காணப்படுகிறதா....???

இந்த அறிகுறி விஷப்பாம்பு கடி அல்ல...

2. கடித்த இடம், இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதித்து காணப்படுகிறதா....??? கடித்த இடம் சற்று தடித்து(வீங்கி)
காணப்படுகிறதா..?? கடுமையான வலி இருக்கிறதா..???

இந்த அறிகுறி விஷப்பாம்பு கடித்ததாகத்தான் இருக்கக்கூடும்...

முதலுதவி:-

1.இறுக்கி கட்டுப் போடவேண்டாம். இறுக்கி கட்டுப் போடுவதன் மூலம், சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்தப்பகுதி அழுகிபோகும். லேசான இறுக்கத்துடன் கட்டுப்போடுவது நல்லது.

2.காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும்.

3.பாம்பு கடிபட்டவர் பதற்றமடையகூடாது. அவர் பதற்றமடையும்போதும் ரத்தஓட்டம் அதிகரிக்கும்.

4.பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்க கூடாது. ஏனெனில் நாம் வேகமாக நடக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் நம் ரத்தத்தில் கலந்துள்ள விஷம் விரைவில் நம் உடல் முழுவதும் பரவி உயிரிழப்பை விரைவு படுத்துகிறது

4.இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தைரியமூட்டவும். எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றோமோ, அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம்.

5.பாம்பு கொத்திய இடத்தை, இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.


6.இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க நேர்ந்தால், பாம்பின் தலையில் அடித்துக் கொல்ல வேண்டாம். ஏனென்றால் தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காணலாம். கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை.

பாம்பு கடித்தால்.. கிட்னியையும், கண்களையும் உடன் பாதிக்ககூடும். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்...

எனவே பாம்பு கடித்தால் அலட்சியம் வேண்டாம். காரணம், சில நேரங்களில் அது மரணத்தை ஏற்படுத்தாவிட்டாலும் உடலின் முக்கிய பாகங்களில் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தி விடும். உங்கள் கிராமங்கள் அவசர மருத்துவத்திற்கு எட்டாத இடத்தில் இருந்தால் இது போன்ற முதலுதவிகளை உடனே செய்ய அறிவுறுத்துங்கள்.

உலகில் ஆயிரக்கணக்கான பாம்பு வகைகள் உள்ளன. அதில் 246 வகை பாம்புகள் இந்தியாவில் உள்ளன. அயர்லாந்து, நியூசிலாந்து, ஆர்ட்டிக் போன்ற பகுதிகளைத் தவிர உலகின் அனைத்து பகுதிகளிலும் பாம்புகள் காணப்படுகின்றன.

பாம்புகள் அனைத்தும் விஷமுள்ளவை என்ற கருத்து மிகவும் தவறானது சில வகைப் பாம்புகளைத் தவிர பெரும்பான்மையான பாம்புகள் விஷ மற்றவையே. இந்தியாவில் வாழக்கூடிய நச்சுப் பாம்புகளில் ஆறு வகைப் பாம்புகள் தான் மிகவும் அபயமளிக்கக் கூடியவை அவை,

1.நல்ல பாம்பு
2.கட்டு வீரியன்
3.கண்ணாடி வீரியன்,
4.சுருட்டை பாம்பு
5.கரு நாகம்
6. ராஜ நாகம்.

மேற்கூறிய ஆறு வகைகளில் முதல் நான்கு வகைகளே நம் நாட்டில் பெருமளவு காணப்படுகின்றன. பாம்பு விஷக் கடிக்கான முறிவு மருந்து"சீர நஞ்சு" (anti -venum) இந்த நான்கு வகை பாம்பு விஷத்தை சேகரித்து கலந்து அதைக் குதிரைக்கு சிறிது சிறிதாக ஊசி மூலம் செலுத்தி பிறகு அதன் இரத்தத்தில் இருந்து சீரம் பிரித்து எடுக்கின்றனர்.

இதுவே அலோபதி மருத்துவத்தில் அனைத்து பாம்பு கடிக்கும் விஷ முறிவு மருந்தாக பயன் படுத்தப் படுகின்றது. ஒருவருக்கு பாம்பு கடித்துவிஷம் ஏறிய நிலையில் இந்த "சீர நஞ்சு" நல்ல குணமளிக்கும் மருந்து தான் ஆனால் பாம்பு கடிக்காத நிலையில் இந்த ஊசி மருந்தைப் போட்டால் இதுவே விஷமாகி அந்த மனிதர் இறந்துவிடக்கூடும்.

பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள் நல்லபாம்பு கடித்து விட்டால் மருந்து :-

கடிவாய் எரியும், வாந்தி வரும், நடை தளரும், மயக்கம் வரும், மூக்கில் நுரை வரும், உயிர்ப்பு தடை படும், இறப்பு நேரிடும், வேப்பிலை கசக்காது,மிளகு காரம் இருக்காது, ஆடு தீண்டாப்பாளை வேர் இனிக்கும், இரு பற்கள் தடம் இருக்கும் குருதி பெரும்பாலும் வராது இதற்க்கு அரை மணி நேரத்தில் மருந்து கொடுத்து விட வேண்டும் .

வாழை மட்டையைப் பிழிந்து அதன் சாற்றை 200 மி.லி.கொடுக்க வேண்டும். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்கலாம். நினை வற்று இருந்தால் உடைகளைக் களைந்து வாழை மட்டையில் படுக்க வைக்கவும் , வாய் திறக்கும் , வாழைப் பட்டை சாற்றை ஊற்றலாம். விஷம் முறிந்து பிழைத்துக் கொள்வார்கள்.

வீரியன் பாம்பு கடித்து விட்டால் மருந்து :-

இது கடித்து விட்டால் கடி வாய் தொடர்ந்து எரியும், குருதி தொடர்ந்து வரும், கடி வாய் சதை வீங்கி நீல நிறமாக மாறும், வாயில், மூக்கில் குருதி வரும், சிறு நீரும் குருதியாகும், ஆடு தீண்டாப் பாளை வேர் உப்புக்கரிக்கும் சிரியா நங்கை, வேம்பு கசக்காது. இது கடித்த அரை மணி நேரத்தில் சிரியா நங்கையை அரைத்து நெல்லி அளவு கொடுத்தால் விஷம் இறங்கி வரும் ,10 நிமிடம் கழித்துக் சிறிது கொடுத்தால் கசக்காத மூலிகை சிறிது கசக்கும், மீண்டும் பத்து நிமிடம் கழித்துக் கொடுத்தால் கசப்பு நன்றாகத் தெரியும் விஷம் படிப் படியாக இறங்குவது தெரியும்.

ஆங்கில மருத்துவம் நம் பூமியில் கால் பதிக்கும் முன் இது போன்ற சித்த பாரம்பரிய மூலிகை மருந்துகள் தான் பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றி வந்துள்ளது.

இரவில் நச்சுப் பூச்சி ஏதேனும் கடித்து விட்டால் என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம். இந்நிலையில் கடி பட்டவருக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால்
 இனிப்புச் சுவையாக இருந்தால் கடித்தது நல்லபாம்பு என்றும்,
புளிப்புச் சுவையாக இருந்தால் கட்டுவிரியன் பாம்பு என்றும்
வாய் வழவழப்பாக இருந்தால் நஞ்சு குறைந்த வழலைப்பாம்பு, நீர் பிரட்டை போன்றவை என்றும்,
கசப்புச் சுவையாக இருந்தால் பாம்பு வகைகள் அல்லாத வேறு பூச்சிகள் என்றும்அறிந்து உணரலாம்.

தேள்கடி மருந்துகள் :
எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள்கடி நஞ்சு இறங்கி விடும். கடிவாயில் எலுமிச்சைப் பழ இரசத்தையும் உப்பையும் கலந்து தடவினால் நலம் கொடுக்கும்.

 கல்லில் சில சொட்டுத் தண்ணீரைத் தெளித்து அதில் புளியங் கொட்டையைச் சூடு உண்டாகும்படி தேய்த்துத் தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும்; நஞ்சு இறங்கியதும் புளியங்கொட்டை விழுந்துவிடும்.

சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும். கண்ணாடி இலையின் பால் எடுத்துத் தேள் கடித்த இடத்தில் வைத்தால் நஞ்சு இறங்கும். பட்டு ரோஜா (டேபிள் ரோஜா) செடியின் இலையின் நான்கை எடுத்து வெற்றிலையில் மடித்துத் தின்றால் நஞ்சு இறங்கும்.

குப்பை மேனி இலையைப் பறித்து நன்றாக நீரில் கழுவி விட்டுப் பின்பு கசக்கிச் சாறு எடுத்துத் தேள் கடித்த இடத்தில் தடவ வேண்டும். அத்துடன் கசக்கிய இலையைக் கடிவாயில் வைத்துக் கட்டி விட்டால் நஞ்சு இறங்கும்.

ஒற்றை மருத்துவம் என்றால் என்ன?
சித்த மருத்துவத்தில் ஒரு பொருளை மட்டும் மருந்தாகப் பயன்படுத்தும் முறைக்கு ஒற்றை மருத்துவம் என்று பெயர்.

நட்டுவாய்க்காலி கொட்டினால் கொப்பரைத் தேங்காயை வாயில் போட்டு மென்று தின்றால் உடன் நஞ்சு நீங்கும்.

 பூரான் கடித்தால் பனை வெல்லத்தை (கருப்பட்டி) தின்னத் தடிப்பு, அரிப்பு உடனே மாறும்.

வெறிநாய்க்கடி மருந்து :
வெறிநாய் கடித்து விட்டால் நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சம பாகமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதில் எலுமிச்சைப் பழம் அளவிற்குக் காலையிலும் மாலையிலும் ஒரு உருண்டை வீதம் பத்து நாள் உட்கொண்டால் வெறிநாய்க்கடி குணமாகும்.


நஞ்சு முறிப்பு

எலி, பெருச்சாளி, மூஞ்சுறு, தேள், பூரான் போன்றவைகளின் நஞ்சை நீக்க, நாயுருவியின் விதையை வீசும்படி எடுத்து வெய்யலில் காயவைத்துப் பொடி செய்ய வேண்டும். இந்தப் பொடியை நல்ல மூடியுள்ள பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். நஞ்சு நீங்கத் தேவையான காலத்தில் இந்தப் பொடியில் மூக்குப் பொடி அளவு எடுத்துத் தேனில் குழைத்துக் காலையிலும், மாலையிலும் 25 நாட்கள் சாப்பிட வேண்டும். இப்படிச் சாப்பிட்டால் நஞ்சு நீங்கும்.

உடலுக்குள் சென்ற எந்த நஞ்சாக இருந்தாலும் வாந்தி ஏற்படுத்துவதன் மூலம் நஞ்சை வெளியேற்றலாம். வாந்தி ஏற்படுத்துவதற்கு நஞ்சிலைப் பறிச்சான் என்ற செடியின் வேருடன், தலைச்சுருளி என்ற பெரு மருந்து இலையைச் சேர்த்து நன்றாக அரைத்து எலுமிச்சைப்பழம் அளவு உருண்டை எடுத்து வெந்நீரில் கலந்து குடித்தால் உடனே வாந்தி ஏற்பட்டு அனைத்து நஞ்சும் அதன் மூலம் வெளியேறிவிடும். வாந்தி ஏற்பட்ட பின்பு எலுமிச்சைப் பழத்தைத் தண்ணீரில் பிழிந்து குடித்துவிட்டால் நஞ்சு முறிந்து போகும்.

சித்த மருத்துவம் ஏராளமான மூலிகைகளை நமக்குக் கூறுகின்றது. நஞ்சு நீக்கத்திற்கு மட்டுமன்றி, மனிதனின் அகப்புற உறுப்புக்களைத் தாக்கும் எல்லாவிதமான சிறு, பெரு நோய்களுக்கும் மருந்துண்டு. ஆனால் சித்த மருத்துவத்தின் பயன்பாடுதான் இப்போது குறைந்து வருகிறது.


பாம்புகள் பொதுவாக இரையைக் கடித்துக் கொன்று உண்ணும். பெரும்பாலான பாம்புக்கடிகள் விஷமற்ற பாம்புகள் மூலமாகவே நிகழ்கின்றது. எடுத்துகாட்டாக சாரைப்பாம்பு. பாம்பு கடித்தலும் விஷத்தைப் பாய்ச்சுதலும் வெவ்வேறான செய்கைகள். மேலும் சில சமயம் தற்காப்புக்காக மனிதர்களையும் கடிக்கக் கூடும். விஷப்பாம்புகூடக் கடித்து விஷத்தைப் அடிக்காமல் இருக்கக்கூடும். தவிரப் பாம்பின் விஷம் பல்லில் இல்லை. சரியான முதலுதவிகள் செய்வதன் மூலம் பாம்புக்கடியினால் ஏற்படும் பெரும்பாலான இறப்புகளைத் தவிர்க்க முடியும்.

பாம்புக்கடியால் நஞ்சு பாய்ந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் சாகின்றனர். அமெரிக்காவில் மட்டுமே ஆண்டுதோறும் 8,000 பேர் நச்சுப் பாம்புக்கடியால் இறக்கின்றனர் . உலகில் ஆண்டுதோறும் ஏறத்தாழ 125,000 மக்கள் நச்சுப் பாம்புக்கடியால் இறக்கின்றனர் என்று கணிக்கப்பட்டுள்ளது .

பாம்புக் கடிக்குச் செய்ய கூடாதவை

கட்டுப் போடலைத் தடுத்தல் - கட்டுப் போடுவதன் மூலம் சில சமயங்களில் நஞ்சு (விஷம்) ஓரிடத்திலேயே தங்குவதால் திசுக்கள் இறக்கக்கூடும்.

வாய்வைத்து உறிஞ்சு வேண்டாம் - வாயில் புண் இருந்தாலோ அல்லது நாக்கு போன்ற விரைவாக உறிஞ்சக் கூடியவை நஞ்சினை உறிஞ்சக் கூடும். இதனால் பாம்புக் கடிக்கு உள்ளானவர் தவிர முதலுதவியாளரும் ஆபத்துக்கு உள்ளாகலாம்.

பாதிக்கப்பட்டவரை பதற்றமடையடையச் செய்யவேண்டாம் - பதற்றமடைந்தால் இதயத்துடிப்பு வேகம் அதிகரிக்கும். இதனால் நஞ்சு விரைவாக உடலில் பரவலாம். இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தேற்றவும். கூட்டமாக வேடிக்கை பார்க்க வந்தால் அவர்களை மதிநுட்பமாக பாம்புபைத் தேடிவருமாறே அல்லது பணிகளையோ கொடுத்தனுப்பவும்.

காயமடைந்த இடத்தைக் கூரிய ஆயுதங்களால் கிழிக்க வேண்டாம். - ஒன்று கூரிய ஆயுதங்களால் கிழித்தால் வைத்தியரினால் பாம்பை கடித்த இடத்தை அடையாளம் காணமுடியாமல் இருக்கும் தவிர பாம்புக் கடியினால் இறப்பைதை விட குருதிப் பெருக்கினால் பாம்புக் கடியினால் இறக்ககூடும். தவிரப் பாவிக்கும் கிழிக்கும் ஆயுதங்கள் துருப்பிடித்திருந்தால் ஏர்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன.

வேறேதேனும் மருந்துகளைக் கொடுக்க வேண்டாம்.

பாம்புக் கடிக்குச் செய்யவேண்டியவை

காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் (குழாயடி நீர் அல்லது குளியலை நீர் போன்றவை. கவனிக்க ஓடும் நீர் கிடைக்காவிடின் ஓர் வாளியில் நீரை எடுத்து காயத்தில் ஊற்றி நீரை ஓட விடவும்) சவர்காரம் (சோப்பு)(soap) போட்டு மூன்று முறை கழுவவும்.
இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரைத் தைரியமூட்டவும். எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றோமோ அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம்.
இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க நேர்ந்தால் பாம்பின் தலையில் அடித்துக் கொலை செய்யவேண்டாம். ஏனென்றால் தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காணலாம். கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை. பாம்பைத் தேடுவதில் நேரத்தை விரயம் பண்ண வேண்டாம். வைத்திய உதவி நோயாளிக்கே கடித்த பாம்பிற்கு அல்ல.    ஆண்டி-வெனம் என்கின்ற நச்சு எதிர்ப்பு மாத்திரைகள் பொதுவாக அரச வைத்தியசாலைகளில் வைத்தியரூடாகவே வழங்கப்படும். இவை சில அலுவலகங்களிலும் குளிர் சானதப் பெட்டிக்குள் இருக்கக்கூடும். இவை இருந்தால் அதையும் எடுத்துச் செல்லவும். எனவே வைத்தியசாலையில் இல்லாவிடின் உதவும்.
    பாம்பு கொத்திய இடத்தைத் இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை கிடையாகப் படுக்க வைத்து வைத்திய சாலைக்குத் தூக்கிக் கொண்டோ அல்லது வாகனமூடாகவோ 6 மணித்தியாலங்களுக்குள் எடுத்துச் செல்லவும். எவ்வளவு விரைவாகக் கொண்டு செல்லாலமோ அவ்வளவு நல்லது. 6 மணித்தியாலக் கணக்கென்பது காலில் கடித்தி்ருக்கும் என்று அனுமானித்துக் கொண்டு கணக்கிடப்படுவது. இதயத்திற்கு அருகில் கடித்தால் விரைவில் மரணம் சம்பவிக்கலாம்.. நடக்கும் போது குருதிச் சுற்றோட்டம் கூட விஷம் உடலில் பரவும் வாய்ப்புக் கூடுவதால் நடத்தித் கொண்டு செல்ல வேண்டாம்.
    வைத்திய சாலையில் பாம்பு கடித்த நேரம் மற்றும் பாம்பின் விபரங்கள் தெரிந்திருப்பின் வைத்தியரிற்குத் தெரியப்படுத்தவும்.

பாம்பின் விடம் பல்லில் இல்லை. கொத்தும் போது பாம்பின் விடம் பாம்பின் வாய்ப் பகுதியில் இருந்து பீச்சியடிக்கப்படும். இது பாம்பின் நிலையைப் பொறுத்து மாறுபடும். எடுத்துக் காட்டாக ஆண் பாம்பும் பெண்பாம்பும் இணையும் நிலையில் கொத்துமானால் கூடுதல் விடத்தைக் கக்கும்.

பாம்புக்கடி மருந்து செய்யும் முறை

பாம்புக்கடி மருந்திற்கு குதிரை அல்லது செம்மறியாட்டின் மீது பாம்பின் நஞ்சை ஊசி மூலமாக பாய்ச்சுவர். அதனால் அக்கால்நடைகளின் எதிர்ப்பு திரவங்கள் இரத்தத்தில் சுரக்க ஆரம்பிக்கும். அந்த எதிர்ப்பு திரவத்தை இரத்தத்தில் இருந்து தனியாக பிரித்துவிடுவர். அந்த எதிர்ப்பு திரவமே பாம்புக்கடி நஞ்சுக்கு மருந்தாக செயல்படுகிறது.

திரைப்படங்களின் வாயிலாக கடித்த பாம்பே மனிதனிடமிருந்து தன் நஞ்சை உறிந்து விடுவது போல் காட்டுவதால் மக்களிடம் பாம்பு நஞ்சே நஞ்சுக்கு மருந்தாக செயல்படுவது போல் மூடநம்பிக்கை உள்ளது.


நம்மூர்  பாகவதர் டெல்லிக்கு  கச்சேரிக்கு  போனார், அங்க பல மாநிலத்து மக்கள் கச்சேரி பார்க்க குழுமியிருந்தனர் எல்லாரையும் சந்தோஷ படுத்தணும்ன்னு அவங்க  அவங்க ஊரின் பெயரில் அமைந்த பாடல்களை பாடி சந்தோசப்படுத்தினார. 

அனைவரும் மிக மகிழ்ச்சியுடன் ரசித்து பாராட்டிவிட்டு சென்றனர்   நிகழ்ச்சி முடிந்ததும் கூட்டத்தில் முன் வருசையில் உட்கார்ந்திருந்த நாலு பாம்பே காரர்கள்  மட்டும்  போகமால் பாகவதரையே முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

பாகவதர் ஏனென்று பயத்ததுடன் கேக்க  -  நீங்க எங்கள் ஊர்ப்பெயர் வரும் படியான பாடலை இதுவரை  பாடவே இல்ல அதைப்பாடுங்க அதுவரை நீங்க இங்கிருந்து போகமுடியாது என்றார்கள். பாகவதர் பெரும் குழப்பத்துடனும் பயத்துடனும் செய்வதறியாது விழித்தார் . பிறகு தன்  சமயோஜித  புத்தியால்,

நாதர் முடி மேல் இருக்கும் நல்ல பாம்பே
உனக்கு நல்ல பெயர் வைத்தது யார் சொல்லு பாம்பே ?
ஆடு பாம்பே விளையாடு பாம்பே ..........................................!

என்று பாடி ஒரு வழியாக அவர்களை திருப்தி படுத்தி தப்பித்தார் !



உலகிலேயே பாம்பு கடித்து இறப்பவர்கள் இந்தியாவில்தான் அதிகம். பாம்பு கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சை பாதி பேருக்கு தெரியாது. உடனடி மருத்துவ வசதிக்கு அருகில் மருத்துவமனைகளும் கிடையாது. தூரத்தில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை விரைவாக அழைத்துச் செல்ல சாலை வசதியும் கிடையாது. இப்படி பல பிரச்னைகளை சமாளித்து டாக்டரிடம் போனால், ‘எந்த பாம்பு கடித்தது’ என கேட்பார். பாம்பு கடித்துவிட்டு, என்னைப் பார் என் அழகைப் பார் என போஸ் கொடுத்துக்கொண்டா இருக்கும். அது தெரிந்தால்தான் சிகிச்சை ஆரம்பிக்க முடியும் என்பார் டாக்டர். இவ்வளவு பிரச்னைகள் இருந்தால் பாம்பு கடிபட்டவர் எப்படி உயிர் பிழைக்க முடியும். அவ்வளவுதான்.. பரலோகம் போய்தான் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்

திண்டுக்கல் அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மகள் ஜமுனா, 5-ம் வகுப்பு மாணவி. வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுமியை ஒரு பாம்பு கடித்துவிட்டு ஓடிவிட்டது. வலியால் துடித்த சிறுமியை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். எந்த வகை பாம்பு கடித்தது என டாக்டர் கேட்டிருக்கிறார். திகைத்துப் போன உறவினர்கள், கடித்த பாம்பை பிடிக்க பாம்பு பிடிக்கும் நபரை அழைத்து வந்தனர். முதலில் ஒரு நல்ல பாம்பையும், பிறகு ஒரு குட்டி கட்டுவிரியனையும் அவர் பிடித்தார்.

ஒரே நேரத்தில் இரண்டு பாம்பு வந்ததால் எந்த பாம்பு கடித்தது என தெரியாமல் இரண்டையும் பிடித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பாம்புகளுடன் வந்த உறவினர்களை பார்த்ததும் அங்கிருந்த நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பாம்புகளை பார்த்த டாக்டர்கள், சிறுமியை கடித்தது கட்டுவிரியன்தான் என உறுதி செய்து அதற்கு ஏற்ப சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு மாணவி அபாய கட்டத்தை தாண்டி உறவினர்களுடன் பேசத் தொடங்கி உள்ளார். பாம்பு அகப்படவில்லை என்றால் சிகிச்சை தாமதமாகி விபரீதம் ஏற்பட்டிருக்கவும் வாய்ப்பு உள்ளது.

பாம்பு கடித்துவிட்டது என்ற பயத்தில் என்ன செய்வது என தெரியாமல் ஆளாளுக்கு தங்களுக்கு தெரிந்த சிகிச்சையை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். எந்த பாம்பு கடித்தாலும், அது என்ன பாம்பு என தெரியாவிட்டாலும் பலன் அளிக்கும் சிகிச்சை முறை அவசியம். மருத்துவமனைக்கு வந்த பிறகும் அநியாயமாக ஒரு உயிர் போவதை மருத்துவம் அனுமதிக்கக் கூடாது.

நாதர்முடி மேல் இருக்கும் நல்ல பாம்பே
நாதர்முடி மேல் இருக்கும் நல்ல பாம்பே
உனக்கு நல்ல பெயர் வைத்தவர் யார் சொல்லு பாம்பே
நாதர்முடி மேல் இருக்கும் நல்ல பாம்பே
உனக்கு நல்ல பெயர் வைத்தவர் யார் சொல்லு பாம்பே
ஆதிசிவன் தலை அமர்ந்த ஆணவமா
ஆதிசிவன் தலை அமர்ந்த ஆணவமா
அவன் அங்கமெல்லாம் விளையாடும் தைரியமா
அவன் அங்கமெல்லாம் விளையாடும் தைரியமா
நாதர்முடி மேல் இருக்கும் நல்ல பாம்பே
உனக்கு நல்ல பெயர் வைத்தவர் யார் சொல்லு பாம்பே
ஊர் கொடுத்த பால் குடித்து உயிர் வளர்த்தாய்
பால் உண்ட சுவை மாறும் முன்னே நன்றி மறந்தாய்
ஊர் கொடுத்த பால் குடித்து உயிர் வளர்த்தாய்
பால் உண்ட சுவை மாறும் முன்னே நன்றி மறந்தாய்
வஞ்சமற்ற தொண்டருக்கே வஞ்சனை செய்தாய்
வஞ்சமற்ற தொண்டருக்கே வஞ்சனை செய்தாய்
அவர் பிஞ்சு மகன் நெஞ்சினுக்கே நஞ்சு கொடுத்தாய்
அவர் பிஞ்சு மகன் நெஞ்சினுக்கே நஞ்சு கொடுத்தாய்
பெயருக்கு தகுந்தாற் போல் மாறிவிடு
எங்கள் பிள்ளையை மறுபடியும் வாழவிடு
பெயருக்கு தகுந்தாற் போல் மாறிவிடு
எங்கள் பிள்ளையை மறுபடியும் வாழவிடு
நெஞ்சம் மாறிவிடு பிள்ளையை வாழவிடு (7 முறை)
சங்கம் அமைத்தொரு முத்தமிழ் பாடிய சங்கரன் மீதினில் ஆணை
சங்கப் புலவர் தம் நாவினில் அடங்கிய செந்தமிழ் மீதினில் ஆணை
மங்கள குங்குமம் மஞ்சள் நிறைந்த சங்கரி மீதினில் ஆணை
மாதொரு பாதன் சூடிய நாகப்பாம்பே உன்மேல் ஆணை
தேவன் மீதில் ஆணை
அவன் திருவடி மீதும் ஆணை
திருமறை மீதில் ஆணை
என் திருநாவின் மேல் ஆணை
பண்மேல் ஆணை
சொல் மேல் ஆணை
என் மேல் ஆணை
உன் மேல் ஆணை


நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே!
உனக்கு நச்சுப் பையை வைத்தது யார் சொல்லு பாம்பே!
ஆடு பாம்பே! விளையாடு பாம்பே!
நின்றாடு பாம்பே! குதித்தாடு பாம்பே!
எழுந்தாடு பாம்பே!

குற்றமற்ற சிவனுக்குக் குண்டலமானாய்
கூறு திருமாலுக்குக் குடையுமானாய்
கற்றை குழல் பார்வதிக்குக் கங்கணமானாய்
கரவாமல் உள்ளங்களித்தாடு பாம்பே!

ஆடு பாம்பே! நின்றாடு பாம்பே! விளையாடு பாம்பே!
குதித்தாடு பாம்பே! எழுந்தாடு பாம்பே!
ஆடு பாம்பே ! விளையாடு பாம்பே !